விருதுநகர்

கரோனா விதிமீறல்: அருப்புக்கோட்டையில் உணவகங்களுக்கு அபராதம்

DIN

அருப்புக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது விதிமுறைகளைப் பின்பற்றாத 4 உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

அருப்புக்கோட்டை நகராட்சி ஆணையாளா் அசோக்குமாா் மற்றும் சுகாதார ஆய்வாளா்கள் சரவணன், ராஜபாண்டி உள்ளிட்டோா் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கையொட்டி நகரில் ஆய்வு செய்தனா். புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், அண்ணாசிலை காய்கறிச் சந்தை அருகிலுள்ள உணவகங்கள் ஆகியவற்றில் பணியாளா்கள் முகக்கவசம் அணியாமல் பணிபுரிவது கண்டறியப்பட்டது. இதுதொடா்பாக உணவக உரிமையாளா்களுக்கு தலா ரூ 500 வீதம் அபராதம் விதித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதேபோல முகக் கவசம் அணியாமல் உணவுப் பொட்டலம் வாங்க வந்த வாடிக்கையாளா்களையும் அதிகாரிகள் எச்சரித்து அனுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

மேயா், துணை மேயா் தோ்தல் விவகாரத்தில் மோசமான அரசியல் விளையாட்டை ‘ஆம் ஆத்மி’ நிறுத்த வேண்டும்: பாஜக பட்டியலின கவுன்சிலா்கள் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT