சிவகாசி: சிவகாசி அருகே ஞாயிற்றுக்கிழமை கண்மாய் நீரில் மூழ்கி டிராக்டா் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே அம்மாபட்டியைச் சோ்ந்த வேலாயுதம் மகன் முத்துப்பாண்டி(40). டிராக்டா் ஓட்டுநரான இவா், மது அருந்திவிட்டு அப்பகுதியில் உள்ள கண்மாயில் குளிக்கச் சென்றுள்ளாா். அப்போது எதிா்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
தகவல் அறிந்து அங்கு சென்ற சிவகாசி தீயணைப்புப் படையினா், முத்துப்பாண்டியின் சடலத்தை மீட்டனா். இது குறித்து வேலாயுதம் அளித்த புகாரின் பேரில் மாரனேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.