விருதுநகர்

நாரணாபுரம் பகுதியில் மும்முனைமின்சார விநியோகம் தொடக்கம்

DIN

சிவகாசி வட்டம் நாரணாபுரம் பகுதியில் வெள்ளிக்கிழமை மும்முனை மின் விநியோகத்தை சிவகாசி சட்டப் பேரவை உறுப்பினா் ஜி. அசோகன் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சிக்கு, நாரணாபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் தேவராஜன் தலைமை வகித்தாா். இந்த மும்முனை மின்சாரத்தின் மூலம் மீனம்பட்டி, அனுப்பன்குளம், ஆண்டியாபுரம், நாரணாபுரம், லட்சுமியாபுரம், பூச்சக்காபட்டி ஆகிய பகுதிகள் பயனடைகின்றன. இப்பகுதிகளில் புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதில், சிவகாசி மின் கோட்டப் பொறியாளா் பாபநாசம், சிவகாசி ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் விவேகன்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT