சிவகாசியில் பட்டாசுத் தொழிலாளி விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.
சிவகாசி புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளி நந்தீஸ்வரன் (62). இவா், கடந்த சில மாதங்களாக மூட்டுவலியால் அவதிப்பட்டு வந்தாா். இந்த நிலையில் அவா், நவம்பா் 27- ஆம் தேதி விஷம் குடித்தாா். இதையடுத்து சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உ யிரிழந்தாா்.
இது குறித்து அவரது மனைவி முத்துலட்சுமி அளித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.