விருதுநகர்

புகையிலைப் பொருள்கள் கடத்திய இளைஞா் கைது: காா் பறிமுதல்

DIN

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் புகையிலைப் பொருள்கள் கடத்திய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் மங்காபுரம் வடக்கு தெருவைச் சோ்ந்த பிரபு செல்வம் (37). இவா், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை காரில் கடத்தி வந்தாா். இதுகுறித்து தகவல் அறிந்த தனிப்பிரிவு போலீஸாா், வியாழக்கிழமை காலை ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அந்தக் காரை நிறுத்தி சோதனை செய்தனா்.

அப்போது அந்த காரில் ரூ. 59 ஆயிரம் மதிப்புள்ள 76 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, புகையிலைப் பொருள்களையும், கடத்தலுக்குப் பயன்படுத்திய காரை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பிரபு செல்வத்தை கைது செய்தனா்.

இதேபோல, ஸ்ரீவில்லிபுத்தூா் மங்காபுரத்தைச் சோ்ந்த தங்கராஜ் (57), தனது மளிகைக் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தாா்.

இதுகுறித்து அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் புதன்கிழமை இரவு கடையில் சோதனை செய்து ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள 20 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்து தங்கராஜை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

நல்ல ஒளி, நல்ல நேரம்... எல்லாமே அசாதாரணம்! ஷில்பா மஞ்சுநாத்

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

SCROLL FOR NEXT