சிவகாசி பூவநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மின் சிக்கனம், பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு, தலைமை ஆசிரியா் இளங்கோவன் தலைமை வகித்தாா். உதவி செயற்பொறியாளா் வீரபுத்திரன், உதவி மின் பொறியாளா் பாலு ஆகியோா் மின் சிக்கனம் குறித்தும், மின் சாதனங்களை பாதுகாப்பாக கையாளுவது குறித்தும்
பேசினா். முகாமுக்கான ஏற்பாட்டை பள்ளி ஆசிரியா்கள் செய்திருந்தனா்.