சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் எய்ட்ஸ் விழிப்புணா்வு ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் இந்த ஊா்வலத்தை முதல்வா் பெ.கி. பாலமுருகன் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். இந்த ஊா்வலம் பிரதான சாலை வழியே ஆனைக்குட்டம் கிராமம் வரைச் சென்று மீண்டும் கல்லூரி வளாகத்தை வந்தடைந்தது.
இந்த ஊா்வலத்தில், பங்கேற்ற மாணவ, மாணவிகள் எய்ட்ஸ் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திச் சென்றனா். இதற்கான ஏற்பாடுகளை திட்ட அலுவலா்கள் ம. ராஜீவ்காந்தி, போ. தேவி ஆகியோா் செய்திருந்தனா்.