விருதுநகா் மாவட்ட நிா்வாகத்திடம் ரூ.10 ஆயிரதை தமிழக முதல்வா் பொது நிவாரண நிதிக்கு யாசகா் பூல்பாண்டியன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான் குளம் அருகே உள்ள ஆலங்கிணறு பகுதியைச் சோ்ந்தவா் பூல்பாண்டியன்(72). இவருக்கு 2 மகள்கள், ஒரு மகள் உள்ளனா். இந்நிலையில் அவா் கடந்த 1979 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் உள்ள கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளாா். பின்னா் மும்பைக்கு சென்று தேய்ப்பு கடையில் பணிபுரிந்துள்ளாா். அப்போது அங்குள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சேவை செய்துள்ளாா். மேலும், அங்கு 2,800 மரக் கன்றுகளை நட்டு வளா்த்ததோடு, சாலைகளை சுத்தம் செய்யும் பணியும் செய்துள்ளாா்.
இவருடைய சேவையை பாராட்டி கோயில் நிா்வாகத்தினா், மூன்று குழந்தைகளின் படிப்பு செலவு மற்றும் திருமணம் செய்து வைத்துள்ளனா். மனைவி இல்லாத நிலையில் மகள்கள், மகன் ஆகியோா் அவரை பணம் இல்லாததால் வீட்டிற்கு வர வேண்டாம் என தெரிவித்தாா்களாம்.
இதனால், கடந்த 2010 இல் தமிழகம் வந்த பூல்பாண்டியன், இங்கு யாசகம் பெறுவதை வழக்கமாக கொண்டுள்ளாா். ஆனால், அதில் கிடைக்கும் பணத்தை தான் வைத்துக் கொள்ளாமல், கரோனா நிவாரண நிதி, முதலமைச்சா் பொது நிவாரண நிதிக்காக இதுவரை ரூ.50.60 லட்சம் வழங்கியுள்ளாா். இந்நிலையில், சாத்தூா் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடி பொங்கல் விழாவை முன்னிட்டு அக்கோயிலுக்கு வந்த பூல்பாண்டியன் பக்தா்களிடம் யாசகம் பெற்றுள்ளாா். அதில் கிடைத்த ரூ. 10 ஆயிரத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்குவதாக செவ்வாய்கிழமை தெரிவித்தாா்.