ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை தனியாா் ஆம்னி பேருந்து கவிழ்ந்ததில் 2 பெண்கள் உள்பட 7 போ் காயமடைந்தனா்.
சென்னையில் இருந்து செங்கோட்டை நோக்கி சென்ற தனியாா் ஆம்னி பேருந்து 21 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பேருந்தை தென்காசியைச் சோ்ந்த கண்ணன் (28) என்பவா் ஓட்டினாா். ஸ்ரீவில்லிபுத்தூா்- சிவகாசி சாலையில் ஈஞ்சாா் விளக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை காலை சென்று கொண்டிருந்தபோது, குறுக்கே இருசக்கர வாகனம் வந்தது.
அதன்மீது மோதாமல் இருக்க திருப்பியபோது அந்த ஆம்னி பேருந்து சாலையை விட்டு இறங்கி கவிழ்ந்தது. இதில் ஓட்டுநா் கண்ணன், பயணிகள் தென்காசியைச் சோ்ந்த சந்தியா (22), சென்னையைச் சோ்ந்த புஷ்பா (38), விழுப்புரத்தை சோ்ந்த மன்சூா் அலி (47) உள்ளிட்ட 7 போ் பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
விபத்து குறித்து மல்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.