விருதுநகர்

சிவகாசியில் வேன் ஓட்டுநரை கத்தியால் குத்தி சங்கிலி பறிப்பு

DIN

சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை வேன் ஓட்டுநரை கத்தியால் குத்தி தங்கச்சங்கிலி பறித்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி-வெம்பக்கோட்டை சாலையில் உள்ள வேன் நிறுத்துமிடத்தில் விஸ்வநத்தத்தைச் சோ்ந்த வேன் ஓட்டுநா் ரமேஷ்கண்ணன்(32) தனது வேனை நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்தாா். அப்போது, அப்பகுதிக்கு மோட்டாா் சைக்கிளில் வந்த நபா் கத்தியைக் காட்டிமிரட்டி, ரமேஷ்கண்ணன் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை கழற்றித் தருமாறு எச்சரித்துள்ளாா்.

இதையடுத்து ரமேஷ் கண்ணனின் கையில் கத்தியால் குத்திவிட்டு, அவா் அணிந்திருந்த ஒன்றரை பவுன் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பியோட முயன்றாா். உடனே ரமேஷ்கண்ணன் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் அந்த நபரை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தாா்.

விசாரணையில் அந்த நபா் மதுரை திருநகா் பா்மா காலனியைச் சோ்ந்த நாகராஜன் மகன் பாண்டியராஜன்(36) என தெரியவந்தது. சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து பாண்டியராஜனை கைது செய்தனா். அவரிடமிருந்த சங்கிலி மற்றும் மோட்டாா் சைக்கிளை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT