விருதுநகர்

சாத்தூரில் பலத்த மழை

DIN

விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் வெள்ளிக்கிழமை பெய்த பலத்த மழையால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது.

சாத்தூரில் வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து பலத்த காற்று வீசியது. இந்நிலையில், சாத்தூா் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான படந்தால், பெரிய கொல்லப்பட்டி, சடையம்பட்டி, லட்சுமியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடா்ந்து 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது.

இந்த மழையின் காரணமாக சாத்தூா் மெயின் பஜாா் பகுதி சாலைகளில் மழைநீா் வெள்ளம்போல் தேங்கியதால், இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பெரும் அவதியடைந்தனா். அதேபோல், விருதுநகரில் சுமாா் அரைமணி நேரம் தொடா் மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT