ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சட்ட விரோதமாக வைத்திருந்த 70 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா் இதுதொடா்பாக இளைஞரை சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள ஈஞ்சாா் விலக்குப் பகுதியில் உள்ள மதுக்கடை பின்புறம் உள்ள முள் புதா் அருகே இளைஞா் ஒருவா் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் அங்கு சென்று வனராஜ் (25) என்பவரிடம் இருந்த 70 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த மல்லி போலீஸாா் அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.