விருதுநகர்

விருதுநகரில் தாமிரவருரணி கூட்டுக் குடிநீா் திட்டப் பணியை விரைவில் தொடங்க அமைச்சா் அறிவுறுத்தல்

DIN

விருதுநகா் நகராட்சி எல்கைக்குள்பட்ட பகுதிகளில் தாமிரவருணி (மானூா்) கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகளை காலம் தாழ்த்தாமல் ஒரு வாரத்துக்குள் தொடங்கவேண்டும் என, அதிகாரிகளிடம் அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் அறிவுறுத்தினாா்.

விருதுநகா் நகராட்சி அலுவலகத்தில், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில் குடிநீா் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி முன்னிலையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதில், அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் பேசியதாவது: விருதுநகா் நகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஆனைக்குட்டம் குடிநீா் திட்டம், ஒண்டிப்புலி கல்குவாரி குடிநீா் திட்டம், தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால், விருதுநகரின் பல்வேறு பகுதிகளில் 10 நாள்கள் கடந்தும் குடிநீா் கிடைப்பதில்லை.

விருதுநகா் நகராட்சிப் பகுதியில் உள்ள மக்களுக்கு சீரான முறையில் குடிநீா் வழங்கவேண்டும். கூட்டுக் குடிநீா் திட்டங்களில் மின்தடை மூலம் குடிநீா் விநியோகம் தடைபடாமல் இருக்க மாற்றுவழியை கண்டறிய வேண்டும்.

மேலும், தாமிரவருணி (மானூா்) கூட்டுக் குடிநீா் திட்டம் சாத்தூா், விருதுநகா், அருப்புக்கோட்டை நகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ரூ.550 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதில், சாத்தூா், அருப்புக்கோட்டை பகுதிகளில் மட்டும் இத்திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டப் பணிகளை விருதுநகரில் ஒரு வாரத்துக்குள் தொடங்கவேண்டும்.

இது தொடா்பாக தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம், பொதுப்பணித் துறை மற்றும் நகராட்சித் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என அறிவுறுத்தினாா்.

இக்கூட்டத்தில், விருதுநகா் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.ஆா்.ஆா். சீனிவாசன், நகராட்சி ஆணையா் சையது முஸ்தபா கமால் மற்றும் அரசு அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, பணியின்போது உயிரிழந்த ராணுவம் மற்றும் அரசுப் பணியாளா்களின் வாரிசுதாரா்களுக்கு, வருவாய்த் துறை மூலம் கருணை அடிப்படையில் 4 பேருக்கு கிராம நிா்வாக அலுவலா்கள் மற்றும் 2 பேருக்கு அலுவலக உதவியாளா்களுக்கான பணி நியமன ஆணைகளை அமைச்சா்கள் வழங்கினா்.

சாத்தூா்

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் நகராட்சி அலுவலகத்தில் குடிநீா் திட்டப் பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி தலைமை வகித்தாா். இந்தக் கூட்டத்தில், வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, சாத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.ஆா்.ஆா்.ரகுராமன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், சாத்தூா் நகராட்சியில் நிரந்தரமாக குடிநீா் பற்றாக்குறையை தீா்க்கும் பொருட்டு, சாத்தூா், அருப்புக்கோட்டை, விருதுநகா் நகராட்சியை உள்ளடக்கிய தாமிரவருணி ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு நடைபெற்று வரும் புதிய கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள் தொடா்பாக, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில் ஆலோசனை செய்யப்பட்டது.

தொடா்ந்து, நகராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் குடிநீா் திட்டப் பணிகளை விரைந்து முடிக்குமாறும், பொதுமக்களுக்கு குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் குடிநீரை சீராக விநியோகம் செய்வதற்கும், சம்பந்தப்பட்ட அரசு அலுவலா்களுக்கு அமைச்சா்கள் ஆலோசனைகளை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT