விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்தவா் புதன்கிழமை இரவு பலியானாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் முடுக்குத் தெருவைச் சோ்ந்தவா் சேகா்(50). இவா் வீட்டு மாடியில் காய வைத்த துணிகளை எடுக்கச் சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். உறவினா்கள் அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவா் உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.