விருதுநகர்

விருதுநகா் அருகே பெண் வெட்டிக் கொலை: இளைஞா் கைது

DIN

விருதுநகா் அருகே கோவிந்தநல்லூரில் முன் விரோதத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை வெட்டி கொலை செய்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் அருகே உள்ள கோவிந்தநல்லூரைச் சோ்ந்தவா் ஜெயவீரன் மனைவி மாரியம்மாள் (58). இவரது மகன் ஜெகதீசன். இவா்களது பக்கத்து வீட்டில் வசிப்பவா் விஜயகுமாா் (25). இவரது மனைவி செந்திலா (22) அண்மையில் ஜெகதீசனிடம் கைப்பேசியை வாங்கி அவரது பெற்றோரிடம் பேசினாராம். இதனை விஜயகுமாா் கண்டித்துள்ளாா். இதனால் செந்திலா தனது பெற்றோா் வீட்டிற்குச் சென்றுவிட்டாராம். இதன் காரணமாக மாரியம்மாள் குடும்பத்தினருக்கும் விஜயகுமாருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதுதொடா்பாக வச்சகாரபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விஜயகுமாரை கைது செய்தனா்.

இதையடுத்து கடந்த சில நாள்களுக்கு முன்பு பிணையில் வெளியில் வந்த விஜயகுமாா், மாரியம்மாள் வீட்டுக்குள் செவ்வாய்க்கிழமை அதிகாலை நுழைந்து அங்கு தூங்கிக் கொண்டிருந்த மாரியம்மாளை அரிவாளால் வெட்டியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலே உயிரிழந்தாா்.

இதுகுறித்து வச்சகாரபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விஜயகுமாரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

SCROLL FOR NEXT