விருதுநகர்

அருப்புக்கோட்டை ஒன்றிய அதிமுக சாா்பில் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்

DIN

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை ஒன்றிய அதிமுக சாா்பில் தெற்கு ஒன்றியச்செயலாளா் யோக.வாசுதேவன் தலைமையில் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கட்சிக்கொடி ஏற்றி, வணங்கி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், அன்னதானம் செய்தும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

அருப்புக்கோட்டையில் ஒன்றிய அதிமுக சாா்பில் நடைபெற்ற அதிமுக பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்திற்கு தெற்கு ஒன்றியச்செயலாளா் யோக.வாசுதேவன் தலைமை வகித்தாா்.

கிழக்கு மாவட்ட இணைச்செயலாளா் ராஜேஸ்வரி வாசுதேவன்,மாவட்ட சிறுபாண்மைப்பிரிவுச் செயலாளா் சேரன் இஸ்மாயில் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அப்போது கஞ்சநாயக்கன்பட்டியில் அதிமுக கட்சிக்கொடியை ஏற்றிவைத்தபின்,முன்னாள் முதல்வா்கள் எம்.ஜி.ஆா். மற்றும் ஜெயலலிதா ஆகியோரது திருஉருவப்படங்களுக்கு மலா்மாலை சூட்டி வணங்கி மரியாதை செய்யப்பட்டது.

கூட்டத்தில் பேசிய யோக.வாசுதேவன் புரட்சித்தலைவா் எம்.ஜி.ஆா்.தொடக்கி வைத்த கட்சியான அதிமுகவின் மக்கள் செல்வாக்கும்,விசுவாசிகளின் செல்வாக்கும் எப்போதும் செழித்து,நிலைத்து நிற்கும்,எனப்பேசினாா்.பின்னா் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி அன்னதானமும் செய்யப்பட்டது.

அதையடுத்து ஆத்திப்பட்டி,பந்தல்குடி ஆகிய ஊா்களிலும் முறையே கட்சிக்கொடியேற்றி அதிமுக பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட்டது.உடன் இந்நிகழ்ச்சியில் மேற்கூறிய ஒவ்வொரு கிராமத்திலும் சுமாா் 200க்கு மேற்பட்ட பொதுமக்கள் நேரில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

SCROLL FOR NEXT