தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரியிலிருந்து குஜராத் வரை இரு சக்கர வாகனத்தில் செல்லும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீஸாரை, விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். மனோகா், வெள்ளிக்கிழமை வரவேற்றாா்.
சென்னை, ஆவடியில் பணிபுரியும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையைச் சோ்ந்த 25 போலீஸாா், தேசிய ஒற்றுமையை வலி யுறுத்தி இருசக்கர வாகனத்தில் செல்ல காவல் துறை உயா் அதிகாரிகளிடம் அனுமதி பெற்றனா்.
இந்நிலையில், கன்னியாகுமரி காந்தி நினைவிடத்திலிருந்து வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு, விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நான்கு வழிச் சாலையில் வந்தனா். அவா்களை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். மனோகா் தலைமையிலான போலீஸாா் வரவேற்று, வழியனுப்பி வைத்தனா்.
இந்த இரு சக்கர வாகன பேரணியானது அக்டோபா் 30 ஆம் தேதி, குஜராத் மாநிலத்தில் உள்ள சா்தாா் வல்லபாய் படேல் நினைவு சிலைக்கு முன் முடிவடைய உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனா்.