விருதுநகர்

வத்திராயிருப்பு அருகே சாலை மறியல்

DIN

விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே வீடுகள் அருகே தேங்கியுள்ள தண்ணீரை அகற்றக்கோரி ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டி ராமசமியாபுரம் மேலத்தெரு பகுதியில் உள்ள அழகா் மகன் ஓடையில் அதிக நீா்வரத்து காரணமாக வீடுகளைச் சுற்றி தண்ணீா் தேங்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக புகாா் எழுந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் வத்திராயிருப்பு-கூமாப்பட்டி சாலையில் அம்பேத்காா் சிலை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT