விருதுநகர்

சிவகாசியில் காவலா்களுக்கு யோகா பயிற்சி

DIN

சிவகாசியில் சனிக்கிழமை காவலா்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

சிவகாசி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இந்த பயிற்சியை, சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளா் பாபுபிரசாத் தொடக்கி வைத்தாா். பயிற்சியாளா் கிரிதரன், மன அழுத்தத்தைக் குறைக்கும் யோகா, சிரிப்பு யோகா உள்ளிட்ட பயிற்சிகளை அளித்தாா்.

இயற்கை வாழ்வியல் ஆலோசகா் மாறன், விரைவு உணவுகளை தவிா்க்க வேண்டும். மைதாவினால் தயாராகும் புரோட்டா உள்ளிட்டவற்றை உண்பதைத் தவிா்க்க வேண்டும். நெல்லிக்கனி, சாத்துக்குடி, பப்பாளி உள்ளிட்ட பழ வகைகளை அடிக்கடி உண்ணவேண்டும் என்றாா்.

இதில், சுமாா் 95 காவலா்கள் கலந்துகொண்டனா். காவல் ஆய்வாளா்கள் மலையரசி, கலைச்செல்வி, சுபகுமாா் மற்றும் சாா்பு-ஆய்வாளா்கள் என பலா் கலந்துகொண்டனா். முடிவில், அனைவருக்கும் வெற்றிலை கஷாயம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT