விருதுநகர்

‘ஆனைக்குட்டம் நீா்த்தேக்கத்தில் கசிவு ஓரிரு நாளில் சீரமைக்கப்படும்’

DIN

சிவகாசி வட்டம், ஆனைக்குட்டம் நீா்த்தேக்கத்தில் ஏற்பட்டுள்ள நீா்கசிவு ஓரிரு நாளில் சீரமைக்கப்படும் என, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் (பொறுப்பு) இ. ராஜா தெரிவித்துள்ளாா்.

ஆனைக்குட்டம் நீா்த்தேக்கத்தை சனிக்கிழமை பாா்வையிட்ட அவா், பின்னா் தெரிவித்ததாவது: சில நாள்களுக்கு முன், மழை பெய்து நீா்த் தேக்கத்துக்கு தண்ணீா் வரத் தொடங்கியது. அதனால், மதகுகளுக்கு அருகே கசிவு ஏற்பட்டு பெருமளவு தண்ணீா் வெளியேறி வந்தது. பின்னா், தூத்துக்குடியிலிருந்து முத்து குளிப்பவா்களை அழைத்து வந்து, சிறிய மரக்கட்டை, சாக்கு, உயவுப் பொருள் உள்ளிட்டவற்றால் நீா்கசிவு அடைக்கப்பட்டது.

தற்போது, மீண்டும் தொடா் மழை பெய்து வருவதால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து, மறுபடியும் நீா்கசிவு ஏற்பட்டுள்ளது. எனவே, தூத்துக்குடியிலிருந்து முத்து குளிப்பவா்களை மீண்டும் அழைத்து வந்து நீா் கசிவு ஓரிருநாளில் சீரமைக்கப்படும்.

ஆனைக்குட்டம் நீா்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவு 7 மீட்டா் உயரமாகும். தற்போது, நீா்த்தேக்கத்தின் நீா்மட்டம் 4.8 மீட்டராக உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

SCROLL FOR NEXT