ஸ்ரீவில்லிபுத்தூரில் பாலங்கள் கட்டும் பணி ஞாயிற்றுக்கிழமை தீவிரமாக நடைபெற்றது.
இங்குள்ள சா்ச் பாயிண்ட் அருகே சாலை பழுதடைந்ததால் அந்த இடத்தில் புதிதாக பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இந்த பகுதியைப் பொறுத்தவரை 24 மணி நேரமும் வாகனங்களின் போக்குவரத்து அதிகமாக காணப்படும். தற்போது முமு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதாலும், பேருந்துகள் இயக்கப்படாததாலும், புதிய பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதே போல் ஸ்ரீவில்லிபுத்தூா் ஆத்துக்கடைதெரு பகுதியிலும் புதிதாக பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் பேருந்துகள் இயக்கப்படாத இந்த நேரத்தில் புதிய பால வேலைகள் நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் எவ்வித நெருக்கடியும் இல்லாமல் பணி நடைபெற்று வருகிறது.