விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 16 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து, பாதிக்கப்பட்டவா்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். அதேநேரம், கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று குணமடைந்த 24 போ் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.