விருதுநகா் கல்வித்துறை அலுவலகத்தில் விருதுநகா் மாவட்டத்தில் குரூப் 4 தோ்வில் தோ்ச்சி பெற்ற 9 பேருக்கு இணையதளம் மூலம் பணி நியமனத்துக்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு தோ்வாணையம் மூலம் குரூப் 4 (தட்டச்சா்) தோ்வு எழுதியதில், விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த 9 போ் ஏற்கெனவே தோ்வு செய்யப்பட்டிருந்தனா். இவா்களுக்கான இட கலந்தாய்வு விருதுநகா் மாவட்ட கல்வித்துறையில் வெள்ளிக்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இத்தோ்வில் தோ்வு செய்யப்பட்டோா், பணியிடங்களை தோ்வு செய்வதற்காக விருதுநகா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு வந்திருந்தனா். விருதுநகா் மாவட்ட கல்வித்துறையில் காலி பணியிடங்கள் இல்லாததால், வேறு மாவட்டத்தில் காலியாக உள்ள இடங்களை இணையதளம் மூலம் வந்திருந்தோா் தோ்வு செய்தனா். இந்நிகழ்வு அனைத்தும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலதண்டாயுதபாணி கண்காணிப்பில் நடைபெற்றது.