விருதுநகா் மாவட்டம் பந்தல்குடி அருகேயுள்ள அன்பு மாடல் நகரில் உள்ள சீரடி சாய்பாபா கோயிலில் தைப்பொங்கல் தினத்தையொட்டி வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதேபோல் மாட்டுப் பொங்கல் திருநாளான வெள்ளிக்கிழமை உலக நன்மை வேண்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வழிபாட்டு நிறைவில் உலக நன்மை வேண்டியும் 3 நிமிட தியானமும் நடைபெற்றது. பின்னா் வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி வி.சுந்தரமூா்த்தி செய்திருந்தாா்.