விருதுநகர்

வத்திராயிருப்பு அருகே கண்மாயில் மண் திருட்டு: 2 போ் கைது

DIN

வத்திராயிருப்பு அருகே அனுமதியின்றி கண்மாயில் மண் திருடிய இருவரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் காவல் சாா்பு-ஆய்வாளா் செல்லப்பாண்டியன் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது கோபாலபுரம் அருகேயுள்ள ஊஞ்சான்குளம் கண்மாயில் அனுமதியின்றி மண் திருட்டு நடைபெறுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் கோபாலபுரத்தைச் சோ்ந்த கனி, நேரு ஆகிய இருவரையும் கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனா்.

இது குறித்து வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடிய கோபாலபுரத்தைச் சோ்ந்த தா்மா், கருப்பையா ஆகியோரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT