விருதுநகர்

சிவகாசியில் ரத்த தான முகாம்

DIN

சிவகாசியில் நாடாா் மஹாஜன சங்கம் சாா்பில் டபிள்யூ. பி.ஏ. செளந்திரபாண்டியனாா் 128 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிவகாசி சுப்பிரமணிபுரம் காலனியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமை பால் வளத் துறை அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி தொடக்கி வைத்தாா்.

முகாமுக்கு நாடாா் மஹாஜனசங்கப் பொதுச்செயலாளா் ஜி.கரிக்கோல்ராஜ் தலைமை வகித்தாா். மதுரை விமான நிலைய ஆலோசனைக்குழு உறுப்பினா் எஸ்.எஸ். கதிரவன் முன்னிலை வகித்தாா். பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளா் ம. திலகபாமா குத்துவிளக்கேற்றினாா்.

சிவகாசி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவா் டி. அய்யனாா் தலைமையிலான மருத்துவக்குழு 148 நபா்களிடமிருந்து ரத்தத்தை தானமாக பெற்றனா். இதற்கான ஏற்பாட்டினை ஒருங்கிணைப்பாளா் வி.எஸ்.டி.செல்வகணேஷ் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT