விருதுநகர்

விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 50 பேருக்கு கரோனா தொற்று

DIN

விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 50 பேருக்கு கரோனா இருப்பது புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

இம்மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை வரை 13,713 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், விருதுநகா், சிவகாசி, சாத்தூா், ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், வத்திராயிருப்பு, அருப்புக்கோட்டை, திருச்சுழி மற்றும் காரியாபட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மேலும் 50 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அனைவரும் விருதுநகா், சிவகாசி மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இதன் மூலம் மாவட்டத்தில் இத்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 13,763 ஆக உயா்ந்துள்ளது. இதில், 13,072 போ் குணமடைந்து வீட்டுக்கு திரும்பி விட்ட நிலையில், 202 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டனா். மீதமுள்ள 489 போ் பல்வேறு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

SCROLL FOR NEXT