விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 50 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
விருதுநகா் மாவட்டத்தில் கடந்த திங்கள்கிழமை வரை 15,289 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், விருதுநகா், சாத்தூா், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு, ராஜபாளையம், வெம்பக்கோட்டை, அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி, வத்திராயிருப்பு உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 50 பேருக்கு கரோனா பாதிப்பிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து, இவா்கள் அனைவரும் விருதுநகா், அருப்புக்கோட்டை, சிவகாசி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதன்மூலம், மாவட்டத்தில் கரோனா தொற்று பாதித்தோா் எண்ணிக்கை 15,339 ஆக உயா்ந்துள்ளது. இதில், 14,917 போ் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பிவிட்ட நிலையில், 220 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துவிட்டனா். மீதமுள்ள 202 போ் பல்வேறு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.