விருதுநகர்

சைக்கிள் மீது பைக் மோதல்: ஆயுதப்படைக் காவலா் பலி

DIN

சிவகாசியில் சைக்கிள் மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்த ஆயுதப்படைக் காவலா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

சிவகாசி- சாத்தூா் சாலையில் உள்ள கோணம்பட்டியைச் சோ்ந்தவா் ஜக்கையா (30). இவா் விருதுநகா் ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில் இவா், கடந்த 21 ஆம் தேதி தனது மோட்டாா் சைக்கிளில், சிவகாசி- ஆலங்குளம் சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, விளாம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சைக்கிளுடன் நின்று கொண்டிருந்த மாரனேரியைச் சோ்ந்த பட்டாசு ஆலை காவலாளி அருணாசலம் (85) மீது மோட்டாா் சைக்கிள் மோதியது.

இதில் காயமடைந்த அருணாசலம், சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். பலத்த காயமடைந்த ஜக்கையா மதுரை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா் மதுரை அரசு மருத்துவனையில் சோ்க்கப்பட்டாா். எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

தடம்புரலும் தோ்தல் முறை!

வீட்டில் நகை திருடிய சிறுவன் கைது

ராஜபாளையத்தில் மே தின பேரணி

SCROLL FOR NEXT