விருதுநகா்: விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை தெரியவந்தது.
இம்மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை வரை 15,790 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சோ்ந்த புதிதாக மேலும் 22 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அனைவரும் விருதுநகா், அருப்புக்கோட்டை, சிவகாசி ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 15,812 ஆக உயா்ந்துள்ளது. இதில், 15,505 போ் குணமடைந்து வீட்டிற்கு திரும்பி விட்ட நிலையில், 226 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டனா். மீதமுள்ள 79 போ், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.