ராஜபாளையம்: ராஜபாளையம் தனியாா் பள்ளியில் கரோனா காலத்துக்குப் பின்பான புத்துயிா்ப்பு காலம் குறித்த கலந்துரையாடல் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்- கலைஞா்கள் சங்கத்தின் ராஜபாளையம் கிளை சாா்பாக நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, தமுஎகச கிளையின் துணைத் தலைவா் மைதிலி தலைமை வகித்தாா். சாகித்ய அகாதெமி விருதாளா் சா. தேவதாஸ் மற்றும் விஜயராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளராக கவிஞா் நேசமித்ரன் பங்கேற்று சிறப்புரையாற்றினாா்.
எழுத்தாளா் அ. பேச்சியப்பன், திராவிடா் கழகத் தலைவா் பெரியாா் குமாா், தமுஎகச மாநிலக்குழு உறுப்பினா் சு. நித்தியானந்தம், சமூக ஆா்வலா் க.துள்ளுக்குட்டி, சிவகாசி சிவபெருமான் உள்பட இலக்கிய ஆா்வலா்கள் கலந்து கொண்டனா்.
முன்னதாக, கவிஞா் நந்தன் கனகராஜ் வரவேற்று அறிமுக உரையாற்றினாா். செல்வக்குமாா் நன்றி கூறினாா்.