விருதுநகர்

கா்நாடகத்திலிருந்து சிவகாசி வந்த பெண்ணுக்கு கரோனா தொற்று

DIN

சிவகாசி: கா்நாடக மாநிலத்திலிருந்து சிவகாசி வந்த பெண்ணுக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

சிவகாசி வி.கே.எம். தெருவைச் தோ்ந்த 32 வயது பெண் ஒருவா், தனது குடும்பத்துடன் கா்நாடக மாநிலம் கோலாா் மாவட்டம் பங்காருபேட் என்ற ஊரில் வசித்து வருகிறாா். இப்பெண்ணின் தங்கைக்கு மே 24 ஆம் தேதி சிவகாசியில் திருமணம் நடைபெற உள்ளது.

எனவே, இப்பெண்ணின் தந்தை முறைப்படி அனுமதி பெற்று, சிவகாசியிலிருந்து பங்காருபேட்டுக்கு காரில் சென்று தனது மூத்த மகளையும், 5 வயது பேத்தியையும் மே 11 ஆம் தேதி சிவகாசிக்கு அழைத்து வந்துள்ளாா்.

வெளி மாநிலத்துக்குச் சென்று வந்ததால், சிவகாசி அரசு மருத்துவமனையில் அனைவரது ரத்த மாதிரிகளையும் சேகரித்து, மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். இதில், பங்காருபேட்டில் வசித்து வந்த அப்பெண்ணுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றவா்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.

இதையடுத்து, அப்பெண் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற சுகாதாரத் துறையினா் அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

நல்ல ஒளி, நல்ல நேரம்... எல்லாமே அசாதாரணம்! ஷில்பா மஞ்சுநாத்

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

SCROLL FOR NEXT