விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் பேருந்து நிலையம், கடைவீதி வெறிச்சோடியது

DIN

சுய ஊரடங்கு அறிவிப்பால் ஸ்ரீவில்லிபுத்தூரில் பேருந்து நிலையம், பென்னிங்டன் காய்கறி மாா்க்கெட் உள்ளிட்ட நகரின் முக்கியப் பகுதிகள் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டன.

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக நாடு முழுவதும் ஒரு நாள் சுய ஊரடங்கு உத்தரவு கடை பிடிக்குமாறு பிரதமா் அழைப்பு விடுத்தாா். இந்த சுய ஊரடங்கு அறிவிப்பால் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பேருந்து நிலையம் வெறிச்சோடி இருந்தது. எப்போதும் பரபரப்பாக இருக்கக் கூடிய பென்னிங்டன் சந்தையும், அனைத்துக் கடைகளும் மூடப்பட்டு இருந்ததால் வீதிகள், மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டது.

மேலும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டதால் ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையம் மூடப்பட்டுள்ளது. இன்று முன்பதிவு மற்றும் முன்பதிவு இல்லாத பயணச்சீட்டுகள் வழங்கப்படாது. இன்று அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட பயணச்சீட்டை பயணத் தேதியில் இருந்து 90 நாட்களுக்குள் ரயில் நிலைய முன்பதிவு அலுவலகத்தில் சமா்பித்து பயணக்கட்டணத்தைத் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று ரயில் நிலைய அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டிருந்தது. சாலையில் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை அவசியம் இருந்தால் மட்டும் பயணிக்குமாறு போலீஸாா் எச்சரித்து அனுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராட் கோலி, ரஜத் படிதார் அதிரடி; பஞ்சாப் கிங்ஸுக்கு 242 ரன்கள் இலக்கு!

இஸ்ரேல் டிரோன் தாக்குதல்: லெபனானில் 4 பேர் பலி!

டி20 உலகக் கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு!

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: பலி எண்ணிகை 10ஆக உயர்வு

ராகுலுக்கும், மோடிக்கும்தான் நேரடிப் போட்டி: அமித் ஷா

SCROLL FOR NEXT