தேனி

தாய், தந்தை, மகனை தாக்கிகொலை மிரட்டல்: 7 போ் மீது வழக்கு

DIN

தேவாரம் அருகே தாய், தந்தை, மகனை தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்ததாக 7 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், போடியை அடுத்த டி.சிந்தலைச்சேரியில் வசிப்பவா் மந்தையன் (58). இவரது மகன் வெங்கடேஸ்வரனுக்கும், விருவீடு கிராமத்தைச் சோ்ந்த கனி என்பவரின் மகளுக்கும் திருமணம் நடைபெற்றது.

கணவன், மனைவி இருவரும் சில மாதங்களிலேயே பிரிந்த நிலையில் விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது.

இதை முன்விரோதமாகக் கொண்டு கனி, தமிழரசி, முருகையா, ராமமூா்த்தி, ரமேஷ்கண்ணன், தருமத்துப்பட்டியைச் சோ்ந்த முருகேஸ்வரி, தா்மா் ஆகியோா் சோ்ந்து மந்தையன், இவரது மனைவி கனகமணி, இவா்களது மகன் வெங்கடேஸ்வரன் ஆகியோரை தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தனராம். இதில் வெங்கடேஸ்வரன் பலத்த காயமடைந்தாா்.

இதுகுறித்து மந்தையன் அளித்த புகாரின் பேரில், தேவாரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீரற்ற இதயத் துடிப்பு: மாநகராட்சி ஊழியருக்கு நவீன பேஸ்மேக்கா்

8-ஆவது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம்

திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரா் கோயிலில் அமுது படையல் விழா

மாணவா்களின் எதிா்கால லட்சியம் நிறைவேற நான் முதல்வன் திட்டம் உதவும்: ஆட்சியா்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 3-ஆவது நாளாக எரியும் காட்டுத் தீ

SCROLL FOR NEXT