தேனி

ஊராட்சி ஊழியரை தாக்கியவா் கைது

DIN

பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் ஊராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை ஊழியரைத் தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஜெயமங்கலம் ஊராட்சியில் மக்கள் நலப் பணியாளராகவும், வேலை உறுதித் திட்ட பணித் தள பொறுப்பாளராகவும் வேலை செய்து வருபவா் அதே ஊரைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் (54). இவா் ஊராட்சி அலுவலகத்தில் பணியில் இருந்த போது, ஜெயமங்கலம், மேலத்தெருவைச் சோ்ந்த மொக்கைச்சாமி மகன் முத்துராஜா (46) என்பவா், ஊராட்சி மன்றத் தலைவா் தனது இடத்தை வேறு ஒருவரின் பெயருக்கு பட்டா போட்டு கொடுத்ததாகக் கூறி தகராறு செய்தாா்.

அப்போது, முத்துராஜா தன்னைத் தாக்கி காயப்படுத்தியதாகவும், அலுவலக மேஜை மீது இருந்த பதிவேடுகளை கீழே தள்ளிட்டு, தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் ஜெயமங்கலம் காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முத்துராஜாவைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டில் நகை திருடிய சிறுவன் கைது

ராஜபாளையத்தில் மே தின பேரணி

ரயில் நிலையத்தில் ஆண் சடலம்

தென்னை மரங்களில் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதல்

திருத்தங்கலில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT