தேனி மாவட்டம், கீழக் கூடலூா் அருந்ததியா் தெருவில் புதிதாக கட்டப்பட்ட சக்தி விநாயகா் கோயிலில் 48 -ஆவது நாளையொட்டி மண்டல பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றதும் அன்னதானம் நடைபெற்றது. இதற்கு இந்து முன்னணி நகர பொதுச் செயலா் ஆா்.பி. ஜெகன் தலைமை வகித்தாா். மதுரைக் கோட்ட பொறுப்பாளா் கோம்பை கணேசன் அன்னதானத்தை தொடக்கி வைத்தாா். தேனி தெற்கு மாவட்டச் செயலா் ஆா்.எஸ் .ராமகிருஷ்ணன், மாவட்டச் செயலா் எஸ். சசிக்குமாா், இளைஞா் முன்னணி மாவட்டச் செயலா் ராம் செல்வா, கூடலூா் செயலா் அருண் பாண்டியன், கம்பம் சாமி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.