தேனி

நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவா் கைது

DIN

தேனி மாவட்டம், கம்பம் அருகே நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கம்பம் அருகேயுள்ள காமயகவுண்டன்பட்டி மந்தையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த தெய்வம் மகன் இந்திரஜித் (30). தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவா், நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதாக ராயப்பன்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில், இந்திரஜித் வீட்டில் போலீஸாா் புதன்கிழமை சோதனை செய்தனா். அங்கு வெடி மருந்தை குழாயில் வைத்து இடித்து சுடும் ஒற்றைக் குழல் துப்பாக்கி இருந்தது.

இதையடுத்து, போலீஸாா் அவரை கைது செய்து விசாரித்தனா்.

இதில் நாட்டுத் துப்பாக்கி மூலம் ஸ்ரீ வில்லிபுத்தூா் மேகமலைப் புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளை வேட்டையாடி இறைச்சியை விற்பனை செய்தது தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT