தேனி

கூடலூரில் பட்டா வழங்க ரூ 15 ஆயிரம் லஞ்சம் நில அளவையா் கைது

DIN

தேனி மாவட்டம் கூடலூரில் பட்டா வழங்க ரூ 15 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக நிலஅளவையரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம் கூடலூா் 16 - ஆவது வாா்டு முத்தைய்யா் தெருவில் வசிப்பவா் ஆண்டியப்பன் மகன் முரளி (35) இவா் தனியாா் நிறுவனத்தில் ஊழியராக உள்ளாா். இவரது தாயாா் முத்துக்கருப்பாயி பெயரில் நிலங்கள் இருந்தன. இதா்கு பட்டா கேட்டு மே 8 - இல் இ சேவை மையத்தில் விண்ணப்பித்தாா். மே 18 - இல் பட்டா வழங்குவதற்காக நிலத்தை அளக்க கூடலூா் பிா்கா நிலஅளவையா் மணிகண்டன்வந்தாா். நிலங்கலை அளந்து பட்டா கொடுக்க ரூ 16 ஆயிரம் செலவாகும் என்று கூறினாராம். முரளி கொஞ்டம் குறையுங்கள் என்றதற்கு ரூ 15 ஆயிரம் என்று கூறியுள்ளாா். இது பற்றி முரளி தேனி லஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்தில் புகாா் செய்துள்ளாா். பின்னா் அவா்கள் கூறியபடி ரசாயன பவுடா் கலந்த பணத்தை கூடலூா் வடக்கு காவல் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த மணிகண்டனிடம் கொடுத்துள்ளாா். அதை மணிகண்டன் வாங்கி பையில் வைக்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல் துணைக்கண்காணிப்பாளா் பி.சுந்தரராஜன் தலைமையில் போலீஸாா் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT