தேனி மாவட்டம், கம்பம் நகர வடக்கு திமுக செயற்குழு கூட்டம் அலுவலகத்தில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
நகரச் செயலாளா் எம்.சி.வீரபாண்டியன் தலைமை வகித்தாா். அவைத்தலைவா் அப்துல் ரகீம் முன்னிலை வகித்தாா். நகர துணை செயலாளா் கராத்தே ராமகிருஷ்ணன் வரவேற்றாா்.
கூட்டத்தில் ரூ. 1 கோடியில் கம்பராயப் பெருமாள் காசி விசுவநாதா் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த கம்பம் சட்டப்பேரவை உறுப்பினா் என்.ராமகிருஷ்ணன் தலைமையில் ஏற்பாடு செய்ததற்கு நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தீா்மானங்களை மாவட்ட திமுக துணைச்செயலாளா் குரு.இளங்கோ வழிமொழிந்தாா்.