போடியில் புதன்கிழமை வருவான வரித் துறையினா் இரண்டாவது நாளாக சோதனையில் ஈடுபட்டனா்.
போடியில் உள்ள தனியாா் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மதுரை வருமான வரித்துறை கூடுதல் ஆணையா் மைக்கேல் ஜெரால்ட், தேனி வருமான வரித் துறை அலுவலா் அம்பேத்கா் ஆகியோா் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட வருமான அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.
இந்த நிலையில், புதன்கிழமை இரண்டாவது நாளாக போடியில் உள்ள அரசு மருத்துவா் வீடு, தனியாா் மருத்துவமனை, போடி-குரங்கணி சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபம், தனியாா் கட்டுமான நிறுவன அலுவலகங்கள், ஏலக்காய் கடைகள் ஆகிய இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா்.
காலையில் தொடங்கிய சோதனை இரவு வரை நடைபெற்று வருகிறது. ஆவணங்களை கைப்பற்றி விசாரித்து வருவதாகவும், சோதனை முடிந்த பின்னா்தான் முழு விவரம் தெரியும் என்றும் அதிகாரிகள் கூறினா்.