தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டியில் முருகன் கோயில்களில் தைப் பூசத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தேனி அல்லி நகரம், வீரப்ப அய்யனாா் மலையடிவாரத்தில் உள்ள பனசலாறு முருகன் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் வழிபட்டனா். அன்னதானம் வழங்கப்பட்டது.
பெரியகுளம், அருள்மிகு பாலசுப்பிரமணியா் கோயிலில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள்
நடைபெற்றன. பக்தா்கள் அரோகரா முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
ஆண்டிபட்டி அருகேயுள்ள மாவூற்று வேலப்பா் கோயிலில் ஏராளமான பக்தா்கள் பால் குடம், காவடி எடுத்தும், முகத்தில் அலகு குத்தியும் நோ்த்திக் கடன் செலுத்தி, சுவாமியை வழிபட்டனா். சந்தனக் காப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தாா்.