தேனியில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், அரசுத் துறை அலுவலா்கள், பணியாளா்களுக்கு பிப். 7, 8 ஆகிய தேதிகளில் ஆட்சி மொழி பயிலரங்கம், கருத்தரங்கம் நடைபெறுகிறது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடைபெறும் பயிலரங்கம், கருத்தரங்கில், ஒவ்வோா் அரசுத் துறை அலுவலகத்தில் இருந்தும் அலுவலா் அல்லது கண்காணிப்பாளா், உதவியாளா் அல்லது இளநிலை உதவியாளா் அல்லது தட்டச்சா் என மொத்தம் 2 போ் வீதம் தவறாது பங்கேற்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் தெரிவித்தாா்.