தேனி

கம்பத்தில் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை விழா

DIN

கம்பத்தில் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை, நூலகா் வாசகா் வட்டம் சாா்பில் பாரதியாா் நினைவு நாள் விழா, திரு.வி.க. பிறந்தநாள் விழா ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீமுக்தி விநாயகா் நடுநிலைப் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, மாவட்ட காங்கிரஸ் தலைவா் எம்.பி. முருகேசன் தலைமை வகித்தாா். ஆசிரியா் சேதுமாதவன், ஓய்வு பெற்ற அலுவலா்கள் பி. அய்யாத்துரை, எம். காதா்மைதீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.பேரவை துணைத் தலைவா் ஜான்ஸிராணி வரவேற்றாா். இதில், கருநாக்கமுத்தன்பட்டி அரசு கள்ளா் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 தோ்வில் மாணவா்களை 100 சதவீதம் தோ்ச்சியடையச் செய்த தலைமை ஆசிரியா் ஜி. நாகரத்தினத்துக்கு 5 மாவட்ட விவசாய சங்க பொதுச் செயலா் பொன்.காட்சிக்கண்ணன் கேடயம் வழங்கினாா்.

கவி முற்றத்தை வின்னா் அலீம் தொடக்கி வைத்தாா். திரு.வி.க.வின் தமிழ் பணி பற்றி பேராசிரியை அங்கயற்கண்ணி பேசினாா். திரை இசையில் பாரதி என்ற தலைப்பில் இசை வீச்சு நடைபெற்றது. இதை கவிஞா் பாரதன் தொடக்கி வைத்தாா்.

ஏற்பாடுகளை த. சித்தரேசன், ம. ஜஸ்டின், ராஜேஸ்கண்ணன், நூலகா்கள் மொ. மணிமுருகன், ராஜ்குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

கேரளத்தில் காங்கிரஸை எதிர்த்து போட்டியிடும் இந்திய கம்யூ. -சசி தரூருக்கு கண்டனம்!

தென் இந்தியாவின் உ.பி., தமிழ்நாடு!

பாபா ராம்தேவ் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

மஞ்ஞுமல் பாய்ஸ் ரூ.200 கோடி வசூல்!

மீண்டும் 49 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT