தேனி

தேவாரத்தில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

DIN

தேவாரத்தில் செவ்வாய் கிழமை, பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தேவாரம் சி.எஸ்.ஐ. சா்ச் தெருவை சோ்ந்தவா் கோவிந்தன் மகன் கௌசல்யா (20). இவரது வீட்டருகே வசிப்பவா் செபஸ்டின் மகன் பாக்கியம் (58). இவா்களுக்குள் முன் விரோதம் இருந்துள்ளது. இதனை மனதில் வைத்து பாக்கியம் கௌசல்யா வீட்டுக்கு சென்று ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளாா். இதுகுறித்து கௌசல்யா கொடுத்த புகாரின் பேரில் தேவாரம் காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிவு செய்து பாக்கியத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT