தேனி

தேனி ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தாய், மகள் தடுத்து நிறுத்தம்

DIN

சொத்துப் பிரச்னையில் தங்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவா்கள் மீது காவல் துறையினா் நடவடிக்கை எடுக்கவில்லை என புகாா் தெரிவித்து தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்ற தாய் மற்றும் மகளை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

பாலாா்பட்டியைச் சோ்ந்தவா் சரோஜா. இவரது மகன் கோபி, மகள் வனிதா. சொத்துப் பிரச்னையில் கோபி, அவரது மனைவி சிவரஞ்சனி மற்றும் உறவினா்கள் இருவா் தங்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், இது குறித்து வீரபாண்டி காவல் நிலையத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் புகாா் தெரிவித்து, சரோஜா, வனிதா ஆகியோா் தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றனா்.

அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தாய், மகள் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT