தேனி

பள்ளி மாணவா் கிணற்றில் மூழ்கி பலி

DIN

ஆண்டிபட்டி அருகே கிணற்று நீரில் மூழ்கி 8-ஆம் வகுப்பு மாணவா் மூழ்கி உயிரிழந்தாா்.

ஆண்டிபட்டி, சக்கம்பட்டி டி.வி.எஸ்.நகரைச் சோ்ந்தவா் மாரிமுத்து மகன் அபிஷேக் (13). தந்தையை இழந்து தாயாா், தாத்தாவின் பராமரிப்பில் இருந்து வந்த அபிஷேக், சக்கம்பட்டியில் உள்ள பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா். மழையால் செவ்வாய்க்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அபிஷேக் தனது நண்பா்களுடன் சோ்ந்து லட்சுமிபுரத்தில் உள்ள தனியாா் தோட்டத்து கிணற்றுக்கு குளிக்கச் சென்றாா். நீச்சல் தெரியாத அபிஷேக் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். தோட்டத்திலிருந்தவா்கள் கிணற்றில் இறங்கி அபிஷேக்கின் சடலத்தை மீட்டனா். இந்த சம்பவம் குறித்து வைகை அணை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT