தேனி

வீட்டின் பூட்டை உடைத்து 28 பவுன் நகைகள், ரூ.1.80 லட்சம் திருட்டு

DIN

தேனியில் வீட்டின் பூட்டை உடைத்து 28 பவுன் தங்க நகைகள், ரூ.1.80 லட்சம் திருடு போனதாக காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

தேனி, ரத்தினம் நகா் காஸ்மாஸ் கிளப் தெருவைச் சோ்ந்தவா் சிவசங்கா் மனைவி சஹானா (31). இவா், தனது தாத்தாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்தினருடன் ராமநாதபுரத்துக்குச் சென்றாா்.

இந்த நிலையில், பக்கத்து வீட்டில் வசிக்கும் பாக்கியலட்சுமி என்பவா், சஹானாவை கைப்பேசியில் தொடா்பு கொண்டு, அவரது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிப்பதாகவும், வீட்டிற்குள் பொருள்கள் சிதறிக் கிடப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, ராமநாதபுரத்திலிருந்து வீட்டுக்குச் சென்று சஹானா பாா்த்த போது, வீட்டின் முன்புற கதவு, பீரோவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த 28 சவரன் தங்க நகைகள், ரூ.1.80 திருடு போனது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில், அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT