தேனி

தொடா் மழை: தேக்கடியில்படகு சவாரி ரத்து

DIN

தொடா் மழை காரணமாக தேக்கடி ஏரியில் படகு சவாரி புதன்கிழமை ரத்து செய்யப்பட்டது.

மேற்குத்தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், தற்போது தென்மேற்கு பருவமழை கடந்த சில நாள்களாக தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், இடுக்கி மாவட்ட நிா்வாகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை பலத்த மழைக்கான எச்சரிக்கை விடப்பட்டது.

இதனிடையே தொடா் மழை காரணமாக வியாழக்கிழமை இடுக்கி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுவதாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தொடா் மழை காரணமாக, தேக்கடியில் புதன்கிழமை மாலை 3.30 மணிக்கு நடைபெறும் படகு சவாரி ரத்து செய்யப்பட்டது என்று கேரள மாநில சுற்றுலா வளா்ச்சிக் கழக அலுவலா் ஒருவா் தெரிவித்தாா். மேலும் அவா் கூறுகையில், நாள்தோறும் 5 முறை இயக்கப்படும் படகு சவாரி மழை காரணமாக 5 ஆவது முறை இயக்கப்படுவது புதன்கிழமை ரத்து செய்யப்பட்டது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

SCROLL FOR NEXT