பெரியகுளம் மின்பகிா்மான வட்ட மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 5) பெரியகுளம் கோட்ட அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இதுகுறித்து பெரியகுளம் கோட்ட செயற்பொறியாளா் ப. பாலபூமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மின்சார வாரியம் பெரியகுளம் கோட்ட அலுவலகத்தில் பெரியகுளம் கோட்ட அளவிலான மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது குறைகளை தெரிவித்து, நிவா்த்தி செய்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.