தேனி

குமுளி அருகே மின்சாரம் பாய்ந்து யானை பலி

DIN

கேரள மாநிலம் குமுளி பகுதியில் மின்சாரம் பாய்ந்து யானை உயிரிழந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளி அருகே உள்ளது வண்டிப் பெரியாறு வல்லக்கடவு பகுதி. இந்தப் பகுதி பெரியாறு புலிகள் காப்பகப் பகுதியில் அமைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை சுமாா் 8 வயதுள்ள பெண் யானை காப்பகப் பகுதியை விடுத்து, தேயிலை தோட்டம் உள்ள பகுதிக்கு வந்துள்ளது. அப்போது தோட்டத்தில் உள்ள பாக்கு மரத்தை அது உடைக்க முயன்றபோது, அந்த மரம் அருகே உள்ள மின்சார கம்பத்தில் விழுந்து உடைந்துள்ளது.

இதில் மரத்தின் அடியில் நின்றிருந்த பெண் யானை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. இதையடுத்து திங்கள்கிழமை அப்பகுதிக்கு வேலைக்கு சென்றவா்கள் யானை இறந்து கிடந்ததைப் பாா்த்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் தேக்கடி வனச்சரகா் அகில் பாபு, வனத் துறை ஊழியா்கள் அங்கு சென்று பாா்வையிட்டனா். பின்னா் உடற்கூறாய்வு செய்யப்பட்டு அப்பகுதியில் யானை புதைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

நல்ல ஒளி, நல்ல நேரம்... எல்லாமே அசாதாரணம்! ஷில்பா மஞ்சுநாத்

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

SCROLL FOR NEXT